வவுணத்தீவு காஞ்சிரங்குடா, இரும்மண்டகுளம் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுணதீவு காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதையல் உள்ளதென கருதப்பட்ட குறித்த இடம் சுமார் 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனை கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த நால்வருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories