ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்

Tuesday, 26 February 2019 - 17:38

%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
தேசிய உயர் டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக அவர்கள் மீது காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பேரணி காரணமாக ஏலவே மூடப்பட்டிருந்த லோட்டஸ் சுற்றுவட்டத்தினுடாக மாணவர்கள் செல்ல முற்பட்ட போதே இந்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மகாபொல தவணையை 5 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தல் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி புஞ்சி பொரளையில் ஆரம்பமானது.

பேரணி காரணமாக மருதானை – தொழில்நுட்ப சந்தியை அண்மித்த பகுதிகளில் இன்று பிற்பகல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips