மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம், ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம் இன்று கையளிக்கப்பட்டது.
ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தலத்தில் வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டு ஆவணத்தை தூதுவரிடம் கையளித்தனர்.
மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணத்துடன், மலையக கல்வி தொடர்பான கோரிக்கைகளும் தூதுவரிடம் கையளிக்கப்பட்டதுடன், மலையக தமிழர் எதிர்நோக்கும் சவால்கள், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம், ஐநா மனித உரிமை பேரவை பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை பற்றியும் ஏனைய சமூகங்களை பற்றியும் ஓரளவு அறிந்துள்ளதாகவும், இனிமேல் மலைநாட்டு தமிழ் மக்களை பற்றி மென்மேலும் அறியவும், அவர்களுக்கு உதவி செய்யவும் ஜப்பானிய அரசும், மக்களும் விரும்புவதாக ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் வாழும் நான்கு பிரதான இனக்குழுக்களில், மலையக தமிழரையும் தனித்துவம் கொண்ட ஒரு இனக்குழுவினராக தாம் இனிமேல் அடையாளப்படுத்திக் கொள்வதாகவும், ஜப்பானிய தூதுவர் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தலத்தில் வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டு ஆவணத்தை தூதுவரிடம் கையளித்தனர்.
மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணத்துடன், மலையக கல்வி தொடர்பான கோரிக்கைகளும் தூதுவரிடம் கையளிக்கப்பட்டதுடன், மலையக தமிழர் எதிர்நோக்கும் சவால்கள், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம், ஐநா மனித உரிமை பேரவை பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை பற்றியும் ஏனைய சமூகங்களை பற்றியும் ஓரளவு அறிந்துள்ளதாகவும், இனிமேல் மலைநாட்டு தமிழ் மக்களை பற்றி மென்மேலும் அறியவும், அவர்களுக்கு உதவி செய்யவும் ஜப்பானிய அரசும், மக்களும் விரும்புவதாக ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் வாழும் நான்கு பிரதான இனக்குழுக்களில், மலையக தமிழரையும் தனித்துவம் கொண்ட ஒரு இனக்குழுவினராக தாம் இனிமேல் அடையாளப்படுத்திக் கொள்வதாகவும், ஜப்பானிய தூதுவர் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றம்: கூரை மீதேறி கைதிகள் போராட்டம்!
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: ஒரு கைதி உயிரிழப்பு
Local
07 August 2026
'ஜனநாயகன்' தந்த விழிப்புணர்வு: 'குட் டச், பேட் டச்' காட்சியால் தைரியம் பெற்ற 8 வயது சிறுமி
Local
07 August 2026
புளத்சிங்களவில் சிற்றூந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 15 பேர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் இருவர் உயிரிழப்பு
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: காயமடைந்த 11 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலை பதற்றம்: 4 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
வாகனம் செலுத்தும் போது காணொளி பார்க்க வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை
Local
07 August 2026