உத்தேச மின்சாரத்துறை சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாரில்லை

Friday, 19 April 2024 - 22:45

%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
உத்தேச மின்சாரத்துறை சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாரில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சக்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சட்டமூலத்தின் ஊடாக தொழிற்சங்கங்களுக்கு அதிக வரப்பிரசாதங்களை அனுபவிக்க முடியாத சூழல் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் சகல நீர் மின்னுற்பத்தி நிலையங்களையும் அரச கட்டுப்பாட்டின் கீழ் முன்கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் அவசியமாகவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips