சிவனொளிபாத மலைக்கு 2 பெண்களுடன் யாத்திரை சென்ற நிலையில் மலை உச்சியில் இருந்து கீழே குதித்து, காணாமல் போயிருந்த இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞரே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லத்தண்ணி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் இன்று (24) காலை குறித்த இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை தோட்டத் தொழிலாளர்கள் குழுவினால் நல்லத்தண்ணி காவல்துறை நிலையத்திற்கு குறித்த இளைஞன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், காவல்துறை உத்தியோகத்தர்கள் இளைஞனை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இராணுவத்தினரும், காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இளைஞரைத் தேடும் நோக்கில் 3 நாட்கள் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories