தம்புள்ளை நகரில் பதற்றம்!

Thursday, 25 April 2024 - 12:26

%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21
தம்புள்ளை நகருக்குள் திடீரென 3 காட்டு யானைகள் புகுந்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த காட்டு யானைகளை வெளியேற்ற 24 மணித்தியாலங்கள் எடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த காட்டு யானைகள் திடீரென நகருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தம்புள்ளை காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் சீகிரிய வனவிலங்கு அதிகாரிகள் குறித்த காட்டு யானைகளை காப்புக்காடுகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips