நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமக்கான நேர ஒதுக்கம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்றிருந்த போது தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு முன்பாக முறையற்ற விதத்தில் செயற்பட்டதாகவும் முறையற்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் இந்த விடயம் குறித்து சபாநாயகரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.
இதேவேளை, அவரை தொடர்ந்து எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
முழுமையான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது...
Latest News
அரபிக்கடலில் மாயமான சரக்கு வானூர்தி : 5 பணியாளர்களுடன் தொடர்பு துண்டிப்பு!
Local
08 July 2026
முறிந்தது ஒப்பந்தம்? : மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதல்!
Local
08 July 2026
நீர்கொழும்பில் இருந்து மாற்றப்பட்ட கைதிகளின் பாதுகாப்பை கோரும் உரிமைகள் அமைப்பு
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறையில் நடந்த உண்மை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
Local
08 July 2026
நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் மீண்டும் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள்
Local
08 July 2026
கொலம்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து காலிறுதிக்கு தகுதி
Local
08 July 2026
சீக்கிய ஆர்வலரின் மரணம் உட்பட்ட குற்றங்கள்: உலகம் முழுவதும் 24 பேர் கைது
Local
08 July 2026
ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தனது தடை நீக்கப்பட்டுள்ளது.
Local
08 July 2026
கால்பந்து கிண்ணத் தொடரின்: பெல்ஜியத்திடம் தோற்ற அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான் கால்பந்து அணி!
Local
08 July 2026
கால்பந்து செம்பியன்சிப் வரலாற்றில் பெறப்பட்ட 3000 ஆவது கோல்!
Local
08 July 2026