மட்டக்களப்பு - களுதாவளை கிராமத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மிகவிரைவில் திறந்து வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்த்தான் தெரிவித்துள்ளார்.
இன்று (14) மாலை அங்கு விஜயம் மேற்கொண்ட அவர், விசேட பொருளாதார மத்திய நிலையத்தைப் பார்வையிட்டதுடன், இதுவரையில் திறக்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதனையடுத்து, பொருளாதார நிலையத்தை திறப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன், விரைவில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2017ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2018 இல் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், அது இதுவரையில் திறந்து வைக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு அரசாங்கத்தின் நிதி வீணடிக்கப்படுவதென்பது பாரிய பிரச்சனையாகும்.
இதைத்தான் தற்கால இளைஞர்களும் தட்டிக் கேட்கின்றார்கள். எனவே நாம் இதனை விரைவாகத் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டியுள்ளது.
பொருளாதார நிலையம் திறக்கப்படும் பட்சத்தில் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரிதும் நன்மை கிடைக்க வேண்டும்.
எனவே, சில பழுதுபார்ப்பு வேலைகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகளை எமது அமைச்சினால் மேற்கொண்டு இதனை விரைவில் திறந்து வைக்கவுள்ளோம்.
இருந்த போதிலும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் சிறப்பாக எவ்வாறு கையாளலாம் என்பது இப்பகுதி மக்களுடைய கையில்தான் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
Latest News
பணம் பறிக்கும் போலி ஊடகச் செயற்பாட்டாளர்கள்: ஜகத் விதான குற்றச்சாட்டு!
Local
15 September 2026
செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு: சீனாவின் எச்சரிக்கையும் அமெரிக்காவுடனான போட்டியும்!
Local
15 September 2026
நேபாளத்தில் வெள்ளம், மண்சரிவால் மின் கட்டமைப்பு பாதிப்பு: அவசரகால மின்சாரம் வழங்க இந்தியா ஒப்புதல்!
Local
15 September 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி: பங்களாதேஷை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வடகொரியா மகளிர் கால்பந்து அணி அபார வெற்றி!
Local
15 September 2026
அணுசக்தி சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ஈரானின் அணுசக்தித் தலைவருக்குத் தடை: அமெரிக்காவின் அழுத்தத்தால் விசாவை ரத்து செய்தது ஒஸ்திரியா!
Local
15 September 2026
போலந்து எல்லைக்கு அருகில் ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதலின் எதிரொலி: யுக்ரைனுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க நேட்டோ உறுதி!
Local
15 September 2026
இன்று பல மாகாணங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு
Local
15 September 2026
தென் செங்கடலில் உள்ள ஹனீஷ் தீவுகளை ஹூதிகள் கைப்பற்றினர்: சவுதி வான் படைத் தளத்தின் மீது தாக்குதல்!
Local
15 September 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ.320 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு
Local
15 September 2026
“பாகிஸ்தானுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்”: ஆசியக் கிண்ண சர்ச்சைக்குப் பின் மதன் லால் கருத்து!
Local
15 September 2026