இங்கிலாந்தில் தமிழர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை?

Saturday, 26 August 2017 - 8:32

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%3F
இங்கிலாந்தில் தமது மனைவியின் நண்பரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தமிழர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
38 வயதான குறித்த இலங்கையரை ஜூரிமார் குற்றவாளியாக நேற்று அறிவித்தனர்.
 
இவர், 32 வயதான மற்றுமொரு இலங்கை தமிழரை இந்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதியன்று கொலை செய்த குற்றத்துக்காகவே இந்த தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
Milton Keynes என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
 
குற்றம் சுமத்தப்பட்டவர், கொலை செய்யப்பட்டவரை கடத்திச்சென்று தாக்குதல் நடத்தி கொலை செய்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
தமது மனைவியுடன் குறித்த தொடர்பை பேணி வந்தார் என்ற அடிப்படையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips