இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ சுப்பர் ஜயன்ஸ்ட் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா 57 ஓட்டங்களையும், தோனி இறுதி நேரத்தில் 9 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த நிலையில் 177 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ஸ்ட் அணி 19 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.