General17 October 2017

பிள்ளையார் சிலை இனந்தெரியாதோரால் உடைப்பு

மன்னாரிலிருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் வழியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை, இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகலையில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் காணப்பட்ட பிள்ளையார் சிலையை உடைத்தமை குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை என்பதோடு, இந்த சம்பவத்தினை மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கயைம சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes