மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம், ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம் இன்று கையளிக்கப்பட்டது.
ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தலத்தில் வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டு ஆவணத்தை தூதுவரிடம் கையளித்தனர்.
மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணத்துடன், மலையக கல்வி தொடர்பான கோரிக்கைகளும் தூதுவரிடம் கையளிக்கப்பட்டதுடன், மலையக தமிழர் எதிர்நோக்கும் சவால்கள், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம், ஐநா மனித உரிமை பேரவை பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை பற்றியும் ஏனைய சமூகங்களை பற்றியும் ஓரளவு அறிந்துள்ளதாகவும், இனிமேல் மலைநாட்டு தமிழ் மக்களை பற்றி மென்மேலும் அறியவும், அவர்களுக்கு உதவி செய்யவும் ஜப்பானிய அரசும், மக்களும் விரும்புவதாக ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் வாழும் நான்கு பிரதான இனக்குழுக்களில், மலையக தமிழரையும் தனித்துவம் கொண்ட ஒரு இனக்குழுவினராக தாம் இனிமேல் அடையாளப்படுத்திக் கொள்வதாகவும், ஜப்பானிய தூதுவர் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தலத்தில் வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டு ஆவணத்தை தூதுவரிடம் கையளித்தனர்.
மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணத்துடன், மலையக கல்வி தொடர்பான கோரிக்கைகளும் தூதுவரிடம் கையளிக்கப்பட்டதுடன், மலையக தமிழர் எதிர்நோக்கும் சவால்கள், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம், ஐநா மனித உரிமை பேரவை பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை பற்றியும் ஏனைய சமூகங்களை பற்றியும் ஓரளவு அறிந்துள்ளதாகவும், இனிமேல் மலைநாட்டு தமிழ் மக்களை பற்றி மென்மேலும் அறியவும், அவர்களுக்கு உதவி செய்யவும் ஜப்பானிய அரசும், மக்களும் விரும்புவதாக ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் வாழும் நான்கு பிரதான இனக்குழுக்களில், மலையக தமிழரையும் தனித்துவம் கொண்ட ஒரு இனக்குழுவினராக தாம் இனிமேல் அடையாளப்படுத்திக் கொள்வதாகவும், ஜப்பானிய தூதுவர் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தில் இணையும் நடிகை ஸ்ரீலீலா
Local
07 August 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கப் பிரேரணை!
Local
07 August 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு
Local
07 August 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம்
Local
07 August 2026
சிறைச்சாலை மோதல்கள் - ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு
Local
07 August 2026
தனது லயோலா கல்லூரி சிரேஷ்ட மாணவர், தனது வகுப்பு மாணவரைக் கைது செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை
Local
07 August 2026
இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!
Local
07 August 2026
சிறைச்சாலைப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்தல்!
Local
07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கண்ணீர் புகை பிரயோகம்
Local
07 August 2026
சிறைச்சாலைச் சம்பவங்களின் பின்னணியில் சதித்திட்டம் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு!
Local
07 August 2026