General01 June 2017

மட்டக்களப்பின் பிரபல உணவகத்தின் கழிவறையில் இறைச்சி மீட்பு! (படங்கள்)

மட்டக்களப்பு நகரில் கழிவறையில் வைத்து இறைச்சியினை வெட்டி உணவினை சமைத்து மக்களுக்கு விற்பனை செய்த மட்டு - பிரதானவீதியில் அமைந்துள்ள பிரபல உணவக உரிமையாளர் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்கள காரியாலயத்துக்கு கிடைத்த தகவலையடுத்து பொதுசுகாதாரப்பரிசோதகர் சோ. அமுதமாலன் தலைமையிலான நான்கு சுகாதாரப்பரிசோதகர்கள் செவ்வாய்க்கிழமை மாலை திடிர் சோதனைகளை
மேற்கொண்டனர்.

இதன் போது, கழிவறையில் வெட்டிய நிலையில் ஒரு தொகை இறைச்சியினை கைப்பற்றியுள்ளதுடன்,பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்களும் கைப்பற்றபட்டுள்ளன.

அத்துடன் உணவு தயாரிப்பாளர்கள் சுகாதாரத்துக்கு ஏற்ற முறையில் இருக்கவில்லையென்ற குற்றசாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து உடனடியாக உணவக உரிமையாளர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் உணவகத்திற்கு எதிர்வரும் 15ம் திகதிவரைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 


Related recommendation
Hiru TV News | Programmes