General18 August 2021

நாடு முடக்கப்படுமா? - ஜனாதிபதியின் அறிவிப்பு!

நாட்டை முடக்குவதற்கு தீர்மானம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டை முடக்குவதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், நாளாந்த ஊதியம் பெறுபவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes