யுக்ரைனின் கீவ் நகரில் உலங்கு வானுர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் அமைச்சர்கள் உள்ளிட்ட 18 பேர் பலியாகினர்.
பலியானவர்களில்; யுக்ரைன் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பள்ளி ஒன்றுக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.