2023 ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்துவது தொடர்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கட் சபை என்பவற்றுக்கு இடையே ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதேநேரம் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப்போட்டிகளை புறக்கணிக்க பாகிஸ்தானும் சில நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது
இந்தநிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர், தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
2023 ஆசியக் கிண்ணப்போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படாவிட்டால், அவை இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக அக்தர் கூறியுள்ளார்.
ஆசிய கிண்ண கிரிக்கட் மற்றும் உலகக் கிண்ணப்போட்டிகள் இரண்டின் இறுதிப் போட்டிகளிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதேநேரம் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப்போட்டிகளை புறக்கணிக்க பாகிஸ்தானும் சில நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது
இந்தநிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர், தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
2023 ஆசியக் கிண்ணப்போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படாவிட்டால், அவை இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக அக்தர் கூறியுள்ளார்.
ஆசிய கிண்ண கிரிக்கட் மற்றும் உலகக் கிண்ணப்போட்டிகள் இரண்டின் இறுதிப் போட்டிகளிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.