இந்தியாவின் நாடாளுமன்றை அலங்கரிக்க காத்திருக்கும் தமிழரின் மரபு “செங்கோல்”

Friday, 26 May 2023 - 10:22

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81+%E2%80%9C%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E2%80%9D
இந்தியாவின் தேசிய தலைநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும் வரலாற்று செங்கோல், தமிழ் மன்னர்களின் கிரீடத்தை விட பெருமை வாய்ந்தது என்று தமிழக வரலாற்றாசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

செங்கோல் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால தமிழ் வரலாற்றை கூறுகிறது.

காஞ்சிபுரம் மண்டல வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த எம்.டி.அஜய்குமார் இது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் மன்னர்களுக்கு செங்கோல் என்பது மகுடத்தை விட பெருமையை தந்தது.

செங்கோல் வைத்திருப்பது என்பது அரசன் தன் மக்களுக்காக பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்பதை குறிப்பதாகும்.

அரசன் தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் போதெல்லாம், செங்கோல் வைக்கப்பட்டது. இதன்பொருள் செங்கோலைப் போலவே ராஜாவும் நிமிர்ந்திருப்பார் என்பதாகும்.

தமிழ் பாரம்பரிய இலக்கியமான சிலப்பதிகாரத்தின்படி, பாண்டிய மன்னன், சாதாரண மனிதனுக்கு அநீதி இழைத்து அவனைக் கொன்றப்போது, தன் செங்கோலை மீண்டும் நிமிர்த்துவதற்காக தன் உயிரைத் தியாகம் செய்தான். என்று கூறப்பட்டுள்ளது.

பழம்பெரும் தமிழ்க் கவிஞரான கருதப்படும் ஔவையாரும் தனது கவிதை ஒன்றில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் செங்கோல் நிமிர்ந்து நீதி வெல்லும் என்று கூறியுள்ளார்.

எனவே செங்கோல் தமிழ் மன்னர்கள் நாட்டை எப்படி ஆட்சி செய்தார்கள் என்பதை காட்டுவதாக காஞ்சிபுரம் மண்டல வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த எம்.டி.அஜய்குமார் தெரிவித்துள்ளார்.

உண்மையில், பாண்டிய மன்னர்கள் மன்னராகப் பதவியேற்பதற்கு முன்னதாக செங்கோலை மீனாட்சி தேவியின் ஆசிர்வாதத்துக்காக சமர்ப்பித்து மீளப்பெற்றுக்கொள்வார்கள்.

நாயக்கர்கள் தங்கள் முடிசூட்டு நாளில் செங்கோல் வைக்கும் பழக்கத்தையும் கடைப்பிடித்தனர்.

இவர்களைத் தவிர, தெற்காசியாவின் பல பகுதிகளை மூன்று நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த சோழ மன்னர்களும் தங்கள் முடிசூட்டு விழாக்களில் பழங்காலப் பேழையை வைத்திருக்கும் பாரம்பரியத்தைக் கொண்டிருந்தனர்.

ஒரு புராணத்தின் படி, சோழர்களிடம் தனது நாட்டை இழந்த ஒரு பாண்டிய மன்னன் தனது கிரீடத்தையும் செங்கோலையும் எடுத்து சோழர்களிடம் இருந்து மறைத்தான். இலங்கை ஆட்சியாளர்களின் உதவியுடன் அதை இலங்கையில் பாதுகாப்பாக வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

இதை அறிந்த சோழ மன்னர்கள், இலங்கையை வென்று, அவர்களிடமிருந்து மகுடத்தையும் செங்கோலையும் பாண்டியர்களிடம் இருந்து பறித்தனர் என்று கூறப்படுகிறது.

அது மாத்திரமின்றி சிலப்பதிகாரத்திற்கு அமைய பாண்டிய மன்னன் தனது ஆட்சியின் போது ஒருவனைக்கொன்று தவறிழைத்து விட்டதாகவும், செங்கோல் ஆட்சி வீழ்ச்சி கண்டதாகவும் தெரிவித்து மீண்டும் செங்கோலை உயர்த்துவதற்காக தனது உயிரை இழந்தான் என்றும் வரலாறு கூறுகின்றது.

மேலும் சேரர் சோழர் மற்றும் பாண்டியர்களின் தேசத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போது செங்கோலை சாட்சியாக கொண்டு ஆட்சிகள் நிறுவப்பட்டுள்ளது.

இந்த வலாற்கு சான்றுகளின் அடிப்படையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பதவியேற்றும் போது பிரித்தானியர்களிடம் இருந்து செங்கோல் பெறப்பட்டுள்ளது.

இது 1947 இல் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதைக் குறிக்கிறது,

இதனையே எதிர்வரும் 28 ஆம் திகதியன்று இந்தியாவின் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிறுவவுள்ளார்.

அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவுவதற்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த வரலாற்றுச் செங்கோல் புதிய நாடாளுமன்ற லோக்சபாவில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கங்கை நீரால் அபிடேகம் செய்யப்பட்டு நிறுவப்படவுள்ளது.