பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகளான மீரா இன்று(19) அதிகாலை உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மீராவின் உடல் சென்னை - ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் உடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 'லியோ' படக்குழு தங்களது சமூக வலைதளத்தில் மீராவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்று வெளியிடவுள்ள லியோ திரைப்படத்தின் புகைப்படமொன்றை நாளை வெளியிடவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை 3 மணியளவில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மீராவின் உடல் சென்னை - ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் உடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 'லியோ' படக்குழு தங்களது சமூக வலைதளத்தில் மீராவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்று வெளியிடவுள்ள லியோ திரைப்படத்தின் புகைப்படமொன்றை நாளை வெளியிடவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.