கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (11) பதிவாகியுள்ளது.
14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.