General26 June 2024

மொட்டுக் கட்சி வேட்பாளராக ரணில் களமிறங்கினால் தோல்வி உறுதி - ராஜித்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால், அவரால் வெற்றிபெற முடியாது என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 
 
எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த விடயத்தைக் கூறினார். 
 
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “நான் அமைச்சரவையில் இணைந்து கொள்ளப் போவதில்லை. 
 
எனது அரசியல் வாழ்க்கையில் என்றுமே செல்வங்களுக்காகவும் பதவிகளுக்காகவும் எந்த முடிவையும் எடுத்ததில்லை. 
 
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவது என்பது புதிய விடயம் இல்லை. நான் இப்போது மக்களின் பிரதிநிதி, நாட்டின் முன்னேற்றத்தையே விரும்புகிறேன். 
 
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் நாட்டின் வரிசை யுகத்தை நிறைவு செய்து பல சலுகைகளை மக்களுக்காக வழங்கினார்.
 
அதில் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். 
 
ஆனால், ராஜபக்ஷக்களுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவாராக இருந்தால் அவர் வெற்றி பெறுவது கடினம்” என ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes