கமல் முன்பு காயத்ரியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய ரசிகர்கள் !

Monday, 21 August 2017 - 18:52

+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%21

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று காயத்ரி எலிமினேட் ஆகி வீட்டை விட்டு வெளியேறினார்.

கமலுடன் நடக்கும் உரையாடலில் ரசிகர்கள் சிலர் காயத்ரியிடம் பல கேள்விகள் எழுப்பினர்.

அதில் "சினேகனை நீங்கள் புறம் பேசுகிறார் என்று சொன்னீர்கள், ஆனால் நீங்களே பல தடவை அப்படி தான் நடந்து கொண்டீர்கள் என்ற கேள்விக்கு " நான் புறம் பேசவில்லை என் மனதில் பட்டதை எனக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து என்ன கற்று கொண்டீர்கள் என்ற கேள்விக்கு உண்மையில் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த போது கமல் சாரிடம் ஒரு தடவையாவது கொட்டு வாங்க வேண்டும் என்று நினைத்தேன் என்றார்.

முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள காயத்ரி ரகுராம், ‘சேரி பிகேவியர்’ என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறாக பேசியதாகக் கூறி 100 கோடி ரூபாய் கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.