சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலை இடிந்து வீழந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்சூ நகரிற்கும் தபு கவுண்டி நகரிற்கும் இடையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையின் பகுதியொன்றே இவ்வாறு இடிந்து வீழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது இடிபாடுகளில் 18 வாகனங்கள் மற்றும் சுமார் 50 பேர் சிக்குண்டதாக அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, காயமடைந்த 50 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டவர்களில் 19 பேர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக சீனாவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்சூ நகரிற்கும் தபு கவுண்டி நகரிற்கும் இடையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையின் பகுதியொன்றே இவ்வாறு இடிந்து வீழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது இடிபாடுகளில் 18 வாகனங்கள் மற்றும் சுமார் 50 பேர் சிக்குண்டதாக அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, காயமடைந்த 50 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டவர்களில் 19 பேர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக சீனாவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.