எதிர்வரும் 36 மணித்தியாலங்கள்... பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன்!!

Monday, 18 September 2017 - 17:51

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+36+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%21%21
நாளைய தினம் நாட்டின் ஊடாக (விசேடமாக மலையகத்திலும் , வடக்கு , வடமத்திய , கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ) இடைக்கிடையில் ஓரளவு கடும் காற்று மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் இடைக்கிடையில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் போன்று காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 4 மணி தொடக்கம் எதிர்வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கையை வௌியிட்டு , காலநிலை அவதான நிலையம் இதனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , நாட்டின் வடகிழக்கு கடற் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 70-80 வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தை வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.