தானியங்கி துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Sunday, 18 August 2019 - 14:05

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
எல்பிடிய-பிடிகல-தல்கஸ்பே பிரதேசத்தில் வீடொன்றினுள் தானியங்கி துப்பாக்கியொன்றை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தவலலையடுத்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரிடமிருந்து ஆயுதங்களும் தானியங்கி துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

43 வயது நிரம்பிய குறித்த நபரை அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து, இம்மாதம் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.