எகிப்தில் தாக்குதல் - பலர் பலி

Friday, 30 January 2015 - 8:56

%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
எகிப்தின் வடபகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தபட்சம் 26 பேர் கொல்லப்பட்டனர்.

எகிப்தின் சினாய் குடாவில், ஐ.எஸ்.தீவிரவாதிகளால் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கார் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் மோர்டார் தாக்குதல்கள் என பல்வேறு வழிகளில் இந்த தாக்குதல்கள் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்குள் எகிப்தின் பாதுகாப்பு தரப்பினர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக எகிப்பு - காசா எல்லைப் பகுதியிலும் அவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அன்சார் பெயிட் அல் மகாடிஷ் என்ற ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் இணைந்த அமைப்பே இந்த தாக்குதல்களுக்கு உரிமை கோரி இருக்கிறது.