19 வயதுக்கு உட்பட்ட சர்வதேச கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான உலக கிண்ண தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது.
டாக்காவில் நடைபெறும் இந்த போட்டியில், இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றின் 19 வயதுக்கு உட்பட்டோரின் அணிகள் மோதுகின்றன.
இலங்கை அணியை அரையிறுதியில் வென்றதன் மூலம் இந்தியாவும், பங்களாதேஸை அரையிறுதியில் வென்றதன் மூலம் மேற்கிந்திய தீவுகளும் இந்த தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன.
இதேவேளை இந்த தொடரின் மூன்றாம் இடத்தை பங்களாதேஸ் பெற்றுக் கொண்டது.
இதற்கிடையில், இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி 20க்கு20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1க்கு1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்தநிலையில் இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.