அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.
வருகிற ஏப்ரல் 14-ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதால் விரைந்து முடிப்பதற்கான பணிகளையும் படக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, ‘தெறி’ படத்தின் எடிட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து ரீ-ரெக்கார்டிங் பணிகளை தொடங்கவிருக்கின்றனர். மேலும் கிராபிக்ஸ் மற்றும் கலர் கரெக்ஷன் பணிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இதையெல்லாம் முடித்துவிட்டு மார்ச் மாத இடையில் ஆடியோவை வெளியிடுவார்கள் என தெரிகிறது.
இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
வருகிற ஏப்ரல் 14-ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதால் விரைந்து முடிப்பதற்கான பணிகளையும் படக்குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, ‘தெறி’ படத்தின் எடிட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து ரீ-ரெக்கார்டிங் பணிகளை தொடங்கவிருக்கின்றனர். மேலும் கிராபிக்ஸ் மற்றும் கலர் கரெக்ஷன் பணிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இதையெல்லாம் முடித்துவிட்டு மார்ச் மாத இடையில் ஆடியோவை வெளியிடுவார்கள் என தெரிகிறது.
இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.