கர்நாடகாவில் சினிமா படபிடிப்பின்போது ஹெலிகாப்டரிலிருந்து நீர்தேக்கத்திற்குள் விழுந்த இரு கன்னட நடிகர்கள் மாயமாகியுள்ளனர்.
அவர்கள் பலியாகியிருக்கலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே Tippagondanahalli நீர்தேக்கத்தில் துனியா விஜய் நடித்து வரும் மஸ்தி குடி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
காட்சிபடி ஹெலிகாப்டரிலிருந்து துனியா விஜய் மற்றும் அனில், உதய் ஆகிய 3 நடிகர்கள் நீர்த் தேக்கத்திற்குள் குதிக்க வேண்டும்.
அவ்வாறு 100 அடி உயரத்திலிருந்து ஹெலிகாப்டரில் இருந்து மூவரும் குதித்தனர். அதில் கதாநாயகன் துனியா விஜய் மட்டும் நீந்தி கரைக்கு வந்தார். அனில் மற்றும் உதய் ஆகிய இரண்டு நடிகர்களும் நீரில் மூழ்கி மாயமானார்கள்.
அவர்கள் இருவரும் பலியாகியிருக்கலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
இந்த சண்டை காட்சி படமாக்கப்படும் முன்பு ஒத்திகை பார்க்கபடவில்லை எனவும், நடிகர்கள் எந்த ஒரு பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்து கொள்ளாமல் நடித்ததால் தான் இது போன்ற அசம்பாவிதம் நடைபெற்றதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் பலியாகியிருக்கலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே Tippagondanahalli நீர்தேக்கத்தில் துனியா விஜய் நடித்து வரும் மஸ்தி குடி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
காட்சிபடி ஹெலிகாப்டரிலிருந்து துனியா விஜய் மற்றும் அனில், உதய் ஆகிய 3 நடிகர்கள் நீர்த் தேக்கத்திற்குள் குதிக்க வேண்டும்.
அவ்வாறு 100 அடி உயரத்திலிருந்து ஹெலிகாப்டரில் இருந்து மூவரும் குதித்தனர். அதில் கதாநாயகன் துனியா விஜய் மட்டும் நீந்தி கரைக்கு வந்தார். அனில் மற்றும் உதய் ஆகிய இரண்டு நடிகர்களும் நீரில் மூழ்கி மாயமானார்கள்.
அவர்கள் இருவரும் பலியாகியிருக்கலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
இந்த சண்டை காட்சி படமாக்கப்படும் முன்பு ஒத்திகை பார்க்கபடவில்லை எனவும், நடிகர்கள் எந்த ஒரு பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்து கொள்ளாமல் நடித்ததால் தான் இது போன்ற அசம்பாவிதம் நடைபெற்றதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.