அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்த இளம் நடிகை சபர்ணா!! கொலையா? தற்கொலையா? பரபரப்பு...

Saturday, 12 November 2016 - 15:59

%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%21%21+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
சென்னை ஆலப்பாக்கத்தில் இளம் நடிகை சபர்ணா ஆனந்த் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கையை அறுத்து தற்கொலை செய்த சபர்ணா உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

சபர்ணாவின் மறைவு, சின்னத்திரை உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சபர்ணா, கோவை அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. சைக்காலஜி படித்தவர்.

சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்துள்ள சபர்ணா, பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சென்னை, மதுரவாயலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவர் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வரவே, அருகிலுள்ளவர்கள் காவற்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சென்னையில் தனது ஆண் நண்பருடன் லிவிங் டு கெதரில் இருந்ததாகவும், ஆண் நண்பர் தன்னை விட்டுப் பிரிந்த விரக்தியில் சபர்ணா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவற்துறை கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார் சபர்ணா. அவர் உடல் ஆடையின்றி நிர்வாண நிலையில் இருந்ததாகவும், கை அறுக்கப்பட்டு இருந்த நிலையில் காவற்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் எழுதிய கடிதத்தைப் காவற்துறை கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபர்ணாவின் சமீபத்திய பேஸ்புக் ஸ்டேட்டஸ் அனைத்தும் பிரிவை மையப்படுத்தியதாகவும், அன்புக்கு ஏங்குபவையாவுமே இருக்கின்றன. மேலும், தன் ஆண் நண்பருடன் இருந்த புகைப்படங்களையும் பேஸ்புக்கில் இருந்து அவர் நீக்கியுள்ளார்.

சபர்ணாவின் உடல் நிர்வாண நிலையில் கிடந்ததால் கொலையா? என காவற்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சபர்ணாவின் மரணம் அவரது நண்பர்களையும், உறவினர்களையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சபர்ணா உடன் நடித்த சில தோழிகள் அதிர்ச்சி விலகாமல் உள்ளனர்.