உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்சவின் உடல்நிலை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
தமக்கான பிணை அனுமதியைக் கோரி 9 தினங்களாக அவர் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
நேற்றைய தினம் அவர் பௌத்த பிக்குகளின் கோரிக்கை அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டார்.
தொடர்ந்தும் அவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.