சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 பேர் கைது!

Friday, 31 March 2017 - 14:51

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 8 பேரை கடற்படையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

மன்னார் - வன்கொலைய்பாடு கடற் பரப்பில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.