9 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவ மனையைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச, தாம் சிகிச்சைபெறும் அறையிலிருந்து வேறு அறைக்கு இன்று மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை விமல் வீரவன்ச நேற்று முன்தினம் கைவிட்டார்.
இந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரை பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.