ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் ஐவர் பலி!

Wednesday, 19 January 2022 - 13:18

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
ஸ்பெயினின் கிழக்கு பகுதியிலுள் முதியோர் இல்லம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஐவர் பலியானதோடு 25 பேர் காயமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

தீப்பரவல் ஏற்பட்ட கட்டத் தொகுதியிலிருந்து புகையை சுவாசித்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் வெளியான நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஸ்பெயின் தீயணைப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.