டொனால்ட் ட்ரம்ப் மீது 7 குற்றச்சாட்டுக்கள் பதிவு!

Friday, 09 June 2023 - 15:29

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+7+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%21
இரகசிய ஆவணங்களை வெள்ளை மாளிகையிலிருந்து திருடி சென்றதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

இதனால் 4 ஆண்டுகள் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

பின்னர் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.

அப்போது, டொனால்ட் ட்ரம்ப் இரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அமெரிக்க சட்டத்தின்படி ஜனாதிபதிகள் தங்களின் பதவிக் காலம் முடிந்ததும், கையாண்ட அனைத்து ஆவணங்களையும் ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் ட்ரம்ப் 'க்ளாஸிஃபைட் டாக்குமென்ட்ஸ்' என்ற மிக முக்கியமான ஆவணங்களை ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக ட்ரம்ப்பின் புளோரிடாவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அதனை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

நீதித்துறையினை ஆயுதமாகப் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடுவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள் எனவும் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது அரச ஆவணங்களை எடுத்துச் சென்றது, சதித்திட்டம் தீட்டியது, நீதித்துறை செயல்பாட்டை முடக்கியது உட்பட 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது ட்ரம்ப் மீது பதிவு செய்யப்படும் இரண்டாவது குற்றச்சாட்டாகும்.

ஏற்கனவே, ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் சிக்கியிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்ப் மீது இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.