டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து இந்த மாத ஆரம்பத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவுஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வோர்னர் இருபதுக்கு இருபது போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் இருபதுக்கு 20 லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
சிட்னி சிக்சர்ஸ் அணியினை எதிர்த்து அவரது அணி இன்று விளையாடுகின்றது.
இன்றைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், விளையாட்டு மைதானத்தை உலங்கு வாநூர்தி ஒன்று வட்டமிட்ட நிலையில் அது திடீரென மைதானத்தில் இறங்கியது.
அதில் இருந்து டேவிட் வோர்னர் இறங்கி ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.
ஹன்டர் பள்ளத்தாக்கில், அவரின் சகோதரரின் திருமண வைபத்தில் கலந்து கொண்டதன் பின்னர், மகிழுந்தில் உரிய நேரத்திற்கு முன் மைதானத்திற்கு செல்ல முடியாததனாலேயே அவர் உலங்கு வாநூர்தியில் வந்து இறங்கியதாக அறிவிக்கப்பட்டது.
அவரது ரசிகர்கள் மகிழ்சி ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.
தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் இருபதுக்கு 20 லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
சிட்னி சிக்சர்ஸ் அணியினை எதிர்த்து அவரது அணி இன்று விளையாடுகின்றது.
இன்றைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், விளையாட்டு மைதானத்தை உலங்கு வாநூர்தி ஒன்று வட்டமிட்ட நிலையில் அது திடீரென மைதானத்தில் இறங்கியது.
அதில் இருந்து டேவிட் வோர்னர் இறங்கி ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.
ஹன்டர் பள்ளத்தாக்கில், அவரின் சகோதரரின் திருமண வைபத்தில் கலந்து கொண்டதன் பின்னர், மகிழுந்தில் உரிய நேரத்திற்கு முன் மைதானத்திற்கு செல்ல முடியாததனாலேயே அவர் உலங்கு வாநூர்தியில் வந்து இறங்கியதாக அறிவிக்கப்பட்டது.
அவரது ரசிகர்கள் மகிழ்சி ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.