இரத்தக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!

Friday, 29 March 2024 - 11:07

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
கடுவலை - கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன், பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடுவலை நகரில் பணிபுரிந்து வரும் அஜந்தா என்ற 51 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (27) அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்ததாகவும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களும் காணாமல் போயுள்ளதாகவும், காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் வழமையாக முற்பகல் 11 மணியளவில் வேலைக்குச் செல்வதாகவும் காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் திருடுவதற்காக சென்ற யாரேனும் தாக்கியதானால், குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனவும், காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்னர்.