இங்கிலாந்து கிரிக்கட் துடுப்பாட்ட வீரர்களின் கண்களில் அச்சத்தை காண ஆசைப்படுவதாக அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
31 வயதான ஜொன்சன், இங்கிலாந்துடனான 20க்கு 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஏசஸ் டெஸ்ட் தொடரில் கண்ட தோல்விக்கு பழிவாங்கும் வகையில், எதிர்வரும் போட்டிகளை பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.