நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் அனைத்தும் தமது ஆட்சியை கவிழ்ப்பதற்காக மேற்கொள்ளப்படுபவையாகவே கருதப்படுவதாக உக்ரெயன் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட முனைவதாக பிரதமர் மைகோலா அசாரொவ் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கையை செய்துக்கொள்ளாமையை கண்டித்தே உக்ரெயனில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது போராட்டக்காரர்கள் அரசாங்க கட்டிடங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதலின் போது பலர் காயமடைந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.